பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 8 பேர் கைது

சென்னை அடுத்த வேளச்சேரியில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

வேளச்சேரி, எம்ஜிஆர் நகரை சேர்ந்த விஷ்வா, தனது பிறந்தநாளை, வீட்டின் மாடியில் நண்பர்களை சேர்த்துக் கொண்டு பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து வேளச்சேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விஷ்வா மற்றும் அவரது நண்பர்கள் 8 பேரை கைது செய்த போலீஸார் பட்டாக்கத்தியையும் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version