பிரமாண்ட பெருமாள் சிலை பயணத்தில் தொடரும் சிக்கல்

பிரமாண்ட பெருமாள் சிலை பயணத்தில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த சிலையானது கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னாறு அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்ட பெருமாள் சிலை பெங்களூரில் உள்ள ஈஜிபுரா எனும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. 64 அடி உயரமும் 24 அடி அகலமும் கொண்ட பெருமாள் சிலையை ராட்சத லாரியில் ஏற்றிக்கொண்டு கடந்த ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி பயணம் தொடங்கியது. செல்லும் வழியில் தடைகள் இருந்ததால் பயணத்தில் சிக்கல்களை கடந்து, கிருஷ்ணகிரி சென்றடைந்தது. இந்தநிலையில், பயணத்தில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தற்காலிக சாலை மற்றும் பாலங்கள் அமைத்து சிலையை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதுவரை பெருமாள் சிலை சின்னாறு அருகே நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version