பாம்புகளை கைகளில் எடுத்து விளையாடிய பிரியங்கா காந்தி

உத்தர பிரதேசத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டிருக்கும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கைகளில் பாம்புகளை வைத்து விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேசத்தின் கிழக்கு பிராந்தியத்திற்கான காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது முதல் பிரியங்கா காந்தி தீவிர சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில் ரேபரேலியில் பிரசாரம் செய்த அவர், பாம்புகளை வைத்து வித்தை காட்டும் நபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் வைத்திருந்த பாம்புகளை பிரியங்கா காந்தி தனது கையில் எடுத்து விளையாடினார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Exit mobile version