கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும், டாட்டா ஏசும் நேருக்கு நேர் மோதி விபத்து

கள்ளக்குறிச்சி அருகே தனியார் சொகுசு பேருந்தும், டாட்டா ஏஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் டாட்டா ஏசும், தனியார் சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுநர், டாட்டா ஏஸ் ஓட்டுநர் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் உயிரிழந்தவர்களில் அடக்கம். பலத்த காயங்களுடன் ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து கள்ளக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version