மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி

மகாத்மா காந்தியின் 73-வது நினைவு தினத்தை ஒட்டி, டெல்லி ராஜ்கட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர்.

Exit mobile version