கேரள ஆளுநர் சதாசிவத்திற்கு கவுரட டாக்டர் பட்டத்தை குடியரசுத் தலைவர் வழங்கினார்

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சட்டவியல் முனைவர் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு நீதியரசர்கள் மூவருக்கு பட்டங்களை வழங்கி கவரவித்தார்.

சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தில் நீதியரசர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கும் விழா குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற்றது. கேரள மாநில ஆளுநரும், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான சதாசிவத்திற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இதேபோன்று, உச்சநீதிமன்ற நீதிபதி ஷரத் அரவிந்த் போப்டே, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹில்ரமானி ஆகியோருக்கும் முனைவர் பட்டங்களை குடியரசு தலைவர் வழங்கினார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் தமிழகத்தில் சுதந்திரமாக செயல்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை தரமணியில் உள்ள சட்டப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய குறைந்த செலவில் சிறப்பாக சட்டக்கல்வியை தமிழக அரசு வழங்கி வருவதாக தெரிவித்தார்.

Exit mobile version