சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஸ் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஸ் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அன்பிற்கினிய தலைவரை இழந்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.

இதேபோல் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், பொதுச்சேவைக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் சுஷ்மா சுவராஜ் என்றும், அவரது மறைவால் ஒட்டுமொத்த இந்தியாவும் வருந்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.

சுஷ்மா சுவராஜ் மறைவு இந்திய அரசியலுக்கும் பாஜகவுக்கும் பேரிழப்பு என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சுஷ்மா சுவராஜ் மறைவுக்காக ஒட்டுமொத்த தேசமும் வருத்தமடைகிறது என கூறியுள்ளார். பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா, சுஷ்மா சுவராஜ் கண்ணியமான நாடாளுமன்றவாதி என தெரிவித்துள்ளார்.

Exit mobile version