திமுக தலைவராக பிரசாந்த் கிஷோரை நியமிக்கலாம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஸ்டாலினால் சுயமாக சிந்திக்க முடியாததால் திமுக தலைவராக பிரசாந்த் கிஷோரை நியமனம் செய்துவிடலாம் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக தொண்டர்கள் தோல்வியை கண்டு அஞ்சமாட்டார்கள் என்றும், மக்களவை தேர்தலுக்கு பிறகு எழுச்சியுடன் கட்சி பணியாற்றி வருவதாகவும் கூறினார்.

மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் மத பிரச்சினைகளை தூண்டி விடுவதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டினார்.

Exit mobile version