யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது: மத்திய அமைச்சர்

யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார்

சமீபத்தில் மும்மொழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால், தமிழகத்தில் பாஜக இந்தி மொழியை திணிக்க வாய்ப்புள்ளதாக அனைத்து கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ள செய்தியில், அனைத்து இந்திய மொழிகளும் ஊக்குவிப்பது மட்டுமே மத்திய அரசின் நோக்கம் என விளக்கமளித்துள்ளார்.

தற்போது புதிய கல்விக்கொள்கை வரைவில் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், கல்விக்கொள்கை மீது பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்து பின் அரசு நல்ல முடிவு எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version