இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, வீடுகள் குலுங்கியதால் பீதி அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

பாண்டா கடற்கரை பகுதிகளில் பூமிக்கடியில் 136 மைல் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தை அடுத்து கட்டிடங்கள் குலுங்கியதால், பீதி அடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்படும் சேதம் குறித்தும் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Exit mobile version