ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 37-ஆக உயர்வு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது.

காஷ்மீரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே கடந்த செவ்வாய்கிழமை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதால் சாலைகள் சேதமடைந்தன. வீட்டிலிருந்த பொதுமக்கள் சாலையில் தஞ்சமடைந்தனர். சில வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அனைத்து மருத்துவமனைகளிலும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த நில நடுக்கத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. 400க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version