இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவின் மொலுக்கஸ் தீவு அருகே கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலுக்கு அடியில் 50 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. இதனால், அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அருகில் உள்ள தீவுகளில் வீடுகள் அதிர்ந்தன. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். எனினும் இந்த நிலநடுக்கத்தினால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில் இன்று அதிகாலை அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5 எனப் பதிவான நிலநடுக்கத்தினால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

Exit mobile version