இந்தோனேசியா: வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு

இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் வாமினா நகரில் உள்ள பள்ளி ஒன்றில், வேறு நகரை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பப்புவா நகரை சேர்ந்த மாணவரை குரங்கு என திட்டியதாக புரளி கிளம்பியது. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இந்த கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 32 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், வன்முறை தொடர்பாக 733 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version