கோட்டையூரில் நிலப்பிரச்சனை காரணமாக இரு பிரிவினரிடையே வன்முறை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூரில் நிலப்பிரச்சனை காரணமாக வன்முறையில் ஈடுபட்ட இரு பிரிவினரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கோட்டையூரில் இரு பிரிவினரிடையே நீண்ட நாட்களாக இடப் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் எல்லைக் கல் ஊன்றுவது தொடர்பாக மீண்டும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், இரு பிரிவினரும் கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தினரைக் கலைத்தனர். வன்முறையில் ஈடுபட்டு பதுங்கி இருந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் பலப்படுத்தியுள்ளனர்.

Exit mobile version