நிலநடுக்கம் வந்தாலும் பெரியாறு அணை பாதிக்கப்படாது: ஜல்சக்தித் துறை அமைச்சர்

முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளதாக ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர செகாவத் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் டீன் குரியாக்கோஸ் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர செகாவத், முல்லைப் பெரியாறு அணை மிக வலுவாக உள்ளதாகவும், நிலநடுக்கம் வந்தாலும் அணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனவும் குறிப்பிட்டார்.

முல்லைப் பெரியாறு அணை எல்லா வகையிலும் பாதுகாப்பாக உள்ளதாக அமைச்சர் கஜேந்திர செகாவத் தெரிவித்ததற்குத் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்று ஆரவாரம் தெரிவித்தனர்.

Exit mobile version