பாக்., ஆக்ரமிப்பு காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 26 பேர் பலி

இந்தியா – பாகிஸ்தான் எல்லையை மையமாக கொண்டு ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவுகோல் 6.3 ஆக பதிவானது. இதனால், பாகிஸ்தானில் பல இடங்களில், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Exit mobile version