திருப்பத்தூரில் உயர் மின்னழுத்த மின்கம்பி அறுந்ததால் இருளில் தத்தளிக்கும் கிராமம்! 2 நாட்களாகியும் அலட்சியம் காட்டும் மின்வாரிய ஊழியர்கள்!

power-cut in thirupathur

திருப்பத்தூர் அருகே சாலையில் அறுந்து கிடக்கும் உயர் மின்னழுத்த மின்கம்பியை சரி செய்யாத மின்வாரிய ஊழியர்களால் 2 நாட்களாக மின்சாரம் இன்றி தவிப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

ஆம்பூர் அடுத்த பெரியதோட்டாளம் பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் மின் கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தன. இது குறித்து மின்வாரியத்திற்கு புகார் அளித்து 2 நாட்களாகியும் இதுவரை மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

சாலையில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை மாணவர்கள், பொதுமக்கள் ஆபத்தான முறையில் கடந்து செல்வதாகவும், நிர்வாக திறமையற்ற விடியா திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version