பூந்தமல்லி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து! மருத்துவக் கல்லூரி மாணவி தலைநசுங்கி பரிதாப பலி!

road accident poonamalli

பூந்தமல்லி அருகே லாரி மோதிய விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமணன்சாவடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகள் சுபிதா, வேலப்பன்சாவடியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு பிசியோதெரபி பயின்றுவந்தார்.

இந்நிலையில், இவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, சென்னீர்குப்பம் சர்வீஸ் சாலை அருகே பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் சுபிதாவின் தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தையடுத்து லாரி ஓட்டுநர் தன்ராஜைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version