திருப்பத்தூர் அருகே ஆங்கிலப்படங்களை மிஞ்சும் வகையில் நடந்த விபத்து

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில், கார் இரண்டாக உடைந்து நொறுங்கியதில், இளைஞர் ஒருவர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார்.

திருக்கோஷ்டியூரைச் சேர்ந்த செல்வம் என்பவர், திருப்பத்தூர் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, காட்டம்பூர் விலக்கு என்ற இடத்தில் அவரது கார் நிலை தடுமாறி பாலத்தில் மோதியது.

மோதிய வேகத்தில் கார் இரண்டாக உடைந்தது. இதில், செல்வம் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதையடுத்து அவர் உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவ்விபத்து குறித்து திருக்கோஷ்டியூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version