தேனியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 2 பேர் பலி

கம்பம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 3ம் தேதி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த போது, அருகில் உள்ள பெட்ரோல் பங்கிலிருந்து இரு சக்கர வாகனம் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே வந்தது. இதில், பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில், சிவனாண்டி என்பவர் சம்பவ இடத்திலியே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி ரேணுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு சக்கர வாகனம் மோதிய அதே வேளையில், பேருந்தின் ஓட்டுநர் திடீரென்று பிரேக் பிடித்ததில் முன் படிகட்டில் நின்று கொண்டிருந்த நடத்துனர் தூக்கி வெளியே வீசப்பட்டுள்ளார். அப்போது பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கிய அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமான உயிரிழந்தார். ஒரே சமயத்தில் நிகழ்ந்த இந்த இரு விபத்துகள் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Exit mobile version