வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு!

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் துணை ராணுவப்படையுடன், காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தமிழகம் முழுவதும் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அணைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பத்திரமாக கொண்டு செல்லப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மொத்தம் 75 மையங்களில் மே 2 ஆம் தேதி அன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் 4 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. அம்மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இந்த நான்கு மையங்களிலும் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version