சென்னையில் தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஐஸ் அவுஸ், போன்ற பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்துக்கு வரும் 11ம் தேதி வருகை தரும் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருநாட்டு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பின் போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு பின்பு மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களை இருவரும் பார்வையிட உள்ளனர்.

இதனையொட்டி மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை, மத்திய பாதுகாப்புதுறை அதிகாரிகள் மற்றும் சீனா நாட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ், ராயப்பேட்டை, பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்கள், பார்களில் தனிப்படை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

Exit mobile version