காவலர்கள் மீது உரசிய பேருந்து ஆத்திரத்தில் பேருந்து ஒட்டுநரை ஹெல்மட்டால் தாக்கிய காவலர்!

புதுச்சேரியில், ரோந்து சென்ற காவலர்கள் மீது தனியார் பேருந்து உரசி சென்றது தொடர்பாக, ஒட்டுநரை காவலர் ஒருவர் ஹெல்மெட்டால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
திருக்கனூரில் இருந்து வில்லியனூர் வழியாக சென்ற தனியார் பேருந்து, எதிர்பாராத விதமாக எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த காவலர்கள் மீது உரசியதால், அவர்கள் கீழே விழுந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காவலர் ஒருவர், பேருந்து ஒட்டுநரை ஹெல்மெட் மற்றும் கையால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் அனைத்தும் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. பேருந்து ஓட்டுநரை தாக்கியது, வில்லியனூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பழனி, என்பது தெரியவந்துள்ளது.YouTube video player

Exit mobile version