புதுச்சேரியில் ஞாயிறு முதல் 31ம் தேதி வரை அமலாகிறது 144 தடை !

 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, புதுச்சேரி முழுவதும் இன்று முதல் 31ஆம் தேதி வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாஹியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், புதுச்சேரியிலும் இன்று முதல் 31ம் தேதி வரை, 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பொது மக்கள் கடைகளில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version