காதலிச்சிட்டு ஏமாத்திட்டு போவியா ? திருமணம் செய்து வைத்த காவல்துறையினர்

காதலியை ஏமாற்றி விட்டு வெளிநாடு தப்ப முயன்ற காதலனுக்கு காவல் நிலையத்தில் திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை அனகாபுதூரைச் சேர்ந்த கவிதா என்பவரும் பொழிச்சலூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும் கடந்த 4 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் வெங்கடேஷ் கவிதாவை கைவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கவிதா வெங்கடேஷ் தன்னை ஏமாற்றியதாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற வெங்கடேஷை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
 
அப்போது கவிதாவை தான் காதலித்ததாகவும், அவர் அழகாக இல்லாததால் அவரை விட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்றதாகவும் கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே வெங்கடேஷ் வெளிநாட்டுக்கு தப்ப முயற்சித்தும், அப்போது கவிதா தற்கொலைக்கு முயன்றதால் வெங்கடேஷ் அந்த முயற்சியை கைவிட்டதும் தெரியவந்தது.

இந்நிலையில், தற்போது விட்டு விட்டால் பிடிக்க முடியாத என எண்ணிய காவல்துறை கவிதாவிற்கும், வெங்கடேஷிற்கும் இரு வீட்டார் சம்பதத்துடன் காவல் நிலையத்தில் திருமணம் செய்து வைத்தனர்.

Exit mobile version