கொரோனாவை கட்டுப்படுத்த சிறந்த தீர்வு வழங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு: பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த சிறந்த தீர்வு வழங்குபவர்களுக்கு 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், மார்ச் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் பொது இடங்களில் பெருமளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த சிறந்த தீர்வு வழங்குபவர்களுக்கு 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version