நாட்டை வலிமையாக நடத்திச் செல்ல பிரதமர் மோடியால் தான் முடியும்: செல்லூர் ராஜூ

வலிமையான பாரதம் வளமான தமிழகம் என்ற அடிப்படையில் மெகா கூட்டணி அமைத்து மக்களை சந்தித்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில், தேர்தல் அலுவலகத்தை மதுரை பரவையில் பேரூராட்சி கழகத்தின் சார்பில், அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்துவைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டை வலிமையாக நடத்திச் செல்ல பிரதமர் மோடியால் தான் முடியும் என்றார். வல்லமை மிக்க தலைமை இந்தியாவிற்கு தேவை என்பதை வலியுறுத்தி மக்களிடம் வாக்குசேகரித்து வருவதாக குறிப்பிட்டார். மேலும், தாங்கள் பேசுவதைப் பற்றி கிண்டல் செய்யும் ஸ்டாலின், முதலில் அவர் சரியாக பேசுகிறாரா? என்பதை பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Exit mobile version