பிரதமர் மோடி இரண்டு நாள் சவூதி அரேபியா பயணம்

சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக அக்டோபர் 29 ஆம் தேதி, சவுதி அரேபியாவுக்கு செல்லவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ரியாத்தில் நடைபெறும் எதிர்கால முதலீட்டு நிறுவன மன்றத்தின் 3-வது அமர்வில் மோடி கலந்து கொள்ளவதாகவும், சவுதி அரேபிய மன்னர் ‘சல்மான் பின் அப்துலாசிஸ் அல்சாத்’ மற்றும் இளவரசர் ‘முகமது பின் சல்மான் அல்சாத்’தையும் சந்தித்து பேசுவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version