பதவியேற்பையொட்டி தலைவர்களின் நினைவகத்தில் பிரதமர் மோடி அஞ்சலி

இரண்டாவது முறையாக நாளை பதவி ஏற்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, முன்னதாக மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் நினைவகத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தவுள்ளார்.

டெல்லியில் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பதவி ஏற்புக்கு முன்னதாக, காலை 7 மணி அளவில் மகாத்மா காந்தி நினைவகத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தும் பிரதமர் மோடி, அதன் தொடர்ச்சியாக காலை 7.15 மணிக்கு, மறைந்த பாஜக தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் நினைவகத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். தொடர்ந்து காலை 7.30 மணியளவில், தேசிய போர் நினைவகத்திற்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார்.

Exit mobile version