இன்றைய இளைஞர்களால் புதிய இந்தியா என்ற கனவு விரைவில் நிறைவேறும் – பிரதமர் மோடி

இன்றைய இளைஞர்களால் புதிய இந்தியா என்ற கனவு விரைவில் நிறைவேறும் என, பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில், மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களிடம் நேரலையில் பேசி வருகிறார். இன்று 50-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கல்வி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, அச்சுறுத்தி வரும் மாசு போன்றவை குறித்து பேசினார்.

குறிப்பாக இளைஞர்கள் பற்றி பேசிய மோடி, இன்றைய இளைஞர்கள் மிகப்பெரிய கனவுகளுடன், வெற்றியை நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டிருப்பதாகவும், இதனால் புதிய இந்தியா என்ற கனவு விரைவில் நிறைவேறும் என்றும் அவர் கூறினார். அரசியல் லாபத்திற்காக மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றவில்லை என்று பிரதமர் விளக்கம் அளித்தார்.

Exit mobile version