தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி

அரசு முறைப் பயணமாகத் தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, குருநானக்கின் 550-வது பிறந்த நாளையொட்டி அதன் நினைவாக ஒரு நாணயத்தை வெளியிட்டார். மேலும், தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள் நூலையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

தொடர்ந்து விழாவில், வணக்கம் என தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி, தாய்லாந்து எனக்கு வெளிநாடு போன்று தோன்றவில்லை என்று கூறினார். தாய்லாந்தின் சுற்றுப்புறம் உள்ளிட்டவை எனது வீட்டில் இருப்பது போல் உணர வைப்பதாக் கூறிய மோடி எங்கிருந்தாலும் நீங்கள் இந்தியர்களே என்று இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார்.

Exit mobile version