பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம்

பாகிஸ்தானில் சிக்கியுள்ள இந்திய விமானி அபிநந்தனை மீட்பது குறித்து ஆலோசனை நடத்த பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் இன்று மாலை கூடுகின்றனர்.

பாகிஸ்தானில் சிக்கியுள்ள இந்திய விமானி அபிநந்தனை மீட்பது குறித்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்து ஆலோசனை நடத்திய நிலையில் இன்று மாலை பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.

அப்போது, விமானி அபிநந்தனை மீட்பது தொடர்பாக அமைச்சரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அபிநந்தனை மீட்க தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. பாகிஸ்தான் வெளியுறவுத்துறையிடம் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் நேரில் சென்று அபிநந்தனை விடுவிப்பது தொடர்பாக வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே ஓடும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கும் டெல்லிக்கும் இடையே இந்த ரயில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version