வாரணாசியில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை மோடி திறந்துவைத்தார்

வாரணாசி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிட்டு வென்ற பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக இன்று தனது தொகுதிக்கு சென்றுள்ளார். கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில், வாரணாசி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள லால் பகதூர் சாஸ்திரியின் முழு உருவ சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Exit mobile version