எகிப்து அதிபருக்கு பிரதமர் மோடி நன்றி!

இந்தியாவின் 74வது குடியரசு தினத்தினை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பாத்தா எல் சிசி கலந்துகொண்டார். அவரது வருகை புரிந்தமைக்காக டிவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். மேலும் அவருடன் கலந்துகொண்டு உபசரித்த புகைப்படங்களையும் பிரதமர் மோடி பகிர்ந்தார். எகிப்து அதிபரின் மதிப்புமிக்க இந்த இருப்பிற்கு அவருக்கு எனது நன்றி என்று மோடி குறிப்பிட்டிருந்தார்.

Exit mobile version