பிரதமர் மோடி தலைமையில் இரண்டு கேபினட் குழுக்கள் அமைப்பு

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் தருவது உள்ளிட்டவற்றுக்காக, பிரதமர் மோடி இரண்டு கேபினட் குழுக்களை அமைத்துள்ளார்.

இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், வேலை வாய்ப்புகளை உறுதி செய்யவும், 10 மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, பியூஷ் கோயல் உள்ளிட்ட அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிப்பது தொடர்பாக இந்த அமைச்சரவை குழு செயல்படும். அதே போன்று, தொழில் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பாகவும் மற்றொரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தொழில் முதலீடுகளை அதிகரிப்பதிலும், தொழில் வளர்ச்சியை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தும்.

Exit mobile version