பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்: தேர்வுத் துறை இயக்குநர்

பிப்ரவரி 1-ம் தேதி 12-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தரா தேவி உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான தேர்வு மையங்கள் அமைத்தல், கண்காணிப்பாளர்கள் நியமனம், மாணவர்களின் விவரங்கள் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 12-ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகளை பிப்ரவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வு துறை இயக்குநர் வசுந்தரா தேவி அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், இன்று மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி பிப்ரவரி 1-ம் தேதி 12-ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார். தேர்வு பணியாளர்களின் போராட்டத்தால், தேர்வு பணிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version