10, 11, 12-ம் வகுப்புகளின் பொதுத்தேர்வு தேதி வெளியீடு

2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளின் பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-2020 ஆம் கல்வி ஆண்டில், நடைபெறவுள்ள அரசுப் பொதுத் தேர்வுகளான பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு ஆகியவற்றுக்கான கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 2 ஆம் தேதி தொடங்கும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 24 ஆம் தேதியன்று முடிவடைகிறது.

பதினொன்றாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 26 ஆம் தேதி நிறைவடைகிறது. மார்ச் 17 ஆம் தேதி துவங்கும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 9 ஆம் தேதி நிறைவடைகிறது.

தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதியை பொறுத்தவரை, ஏப்ரல் 24 ஆம் தேதியன்று 12 ஆம் வகுப்புக்கும், 11ஆம் வகுப்புக்கு மே 14 ஆம் தேதியும், மே 4 ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

 

Exit mobile version