பெரியாரின் திருவுருவ படத்திற்கு முதல்வர் , துணை முதல்வர் மரியாதை

பெரியாரின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் பெரியாரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

ஈ.வே.ரா. பெரியாரின் 141வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் பெரியாரின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சென்னை அண்ணா மேம்பாலத்தில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள பெரியாரின் உருவ படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Exit mobile version