8 பவுன் சங்கிலியை பறித்து சென்ற திருடனை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வாகரையில் மளிகைக் கடையில் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற திருடனை பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர்.

மளிகை கடையில் பொருட்கள் வாங்கிகொண்டிருந்த சரஸ்வதி என்ற பெண்ணிடம் 3 பேர் கொண்ட கும்பல் கடையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடினர். அப்போது சரஸ்வதி கூச்சலிட்டதால் பொதுமக்கள் திரண்டு வந்து தப்பியோடியவர்களை துரத்தி பிடித்தனர். இதில் இரண்டு பேர் தப்பியோடிய நிலையில் பொள்ளாச்சியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Exit mobile version