பயணிகள் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

உத்தரபிரதேச மாநிலம் மைன்புரியில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டெல்லியிலிருந்து உத்திரபிரதேச மாநிலம் வாராணசிக்கு பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து மைன்புரி அருகே ஆக்ரா லக்னோ பறக்கும் சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல முயற்சித்தாக தெரிகிறது. அப்போது எதிரே வந்த லாரியில் எதிர்பாராத விதமாக மோதியதில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக இருப்பதால் உயிர்பலி மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Exit mobile version