காவலர்களை மிக இழிவாகவும், ஒருமையிலும் கோஷமிடும் விசிக கட்சியினர்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காவல் நிலையத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை ஒருமையில் பேசிதால், கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பிணையில் வெளியில் வந்த பாஸ்கரன், கட்சி தொண்டர்களுடன் காரில் ஊர்வலமாக வந்து, காவலர்களை மிகவும் இழிவாகவும், ஒருமையிலும் பேசி கோஷமிட்டுள்ளார். திமுகவின் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினரே, இழிவாகப்பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மாவட்ட செயலாளர் பாஸ்கரன் உள்பட 50க்கும் மேற்பட்ட நபர்கள் மீது 9 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள பாஸ்கரன் உள்ளிட்டோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version