100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு !

வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் தேசிய ஊரக 100 நாள் வேலை திட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பணியாளர்களுக்கு வேலை மற்றும் சம்பளம் முறையாக வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், 100 நாள் வேலையை 30 நாட்கள் மட்டுமே வழங்குவதாக பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வேலை செய்த பணியாளர்களுக்கு 220 ரூபாயில் 20 ரூபாய் பிடித்தம் செய்யப்படுவதாகவும், ஒரு சில பணியாளர்களுக்கு 2 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாகவும் பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Exit mobile version