திமுக வட்ட செயலாளர் கொலை வழக்கில் திமுகவை சேர்ந்த 8 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் திமுக வட்ட செயலாளர் பொண்ணுதாஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

திருநெல்வேலி மாநகர 38-வது வார்டு திமுக செயலாளராக இருந்த பொன்னுதாஸ் என்ற அபே மணி, மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.தகவல் அறிந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், உட்கட்சி பூசல் மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த கொலை வழக்கில் திமுகவை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்த நிலையில், முக்கிய குற்றவாளியான வழக்கறிஞர் அருண்பிரவீனை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நியிலையில் வழக்கறிஞர் அருண்பிரவீன் மாவட்ட நான்காவது நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

Exit mobile version