பழவந்தாங்கலில் மூதாட்டியிடம் செயின் பறித்த கொள்ளையன் கைது

சென்னை பழவந்தாங்கலில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நங்கநல்லூரில் கடந்த 31ம் தேதி மாலை எஸ்பிஐ காலனியில் நடந்து சென்று கொண்டிருந்த ஜெயலட்சுமி என்ற மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செயின் பறிப்பில் ஈடுபட்டனர்.தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த அவர்கள், மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் தங்கச்சங்கலியை பறித்து சென்றனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பழவந்தாங்கல் காவல்துறையினர் அந்தப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நங்கநல்லூரை சேர்ந்த தினேஷ் என்பவரை புழுதிவாக்கத்தில் கைது செய்தனர். அவரிடம் இருந்து நாலரை சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள கணேஷ் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version