பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 5 வது ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிரம்

பாகிஸ்தான்- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையாயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுனில் இன்று நடைபெற உள்ளநிலையில், தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம், மேற்கொண்டு விளையாடி வருகிறது. போர்ட் எலிசபெத்தில் நடந்த முதல் போட்டியில், பாகிஸ்தானும், டர்பனில் நடந்த 2 வது ஒரு நாள் மற்றும் செஞ்சூரியனில் நடந்த 3 வது ஒரு நாள் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்றன. ஜோகனஸ்பெர்க்கில் நடந்த 4 வது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளும் 2 க்கு 2 என சம நிலையில் உள்ளன. இந்நிலையில், தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் 5 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேப்டவுனில் இன்று நடைபெறுகிறது. தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருவதால், இப்போட்டி பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version