பயங்கரவாதிகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும்: பிபின் ராவத்

காஷ்மீரின் சூழலை சீர்குலைக்க பாகிஸ்தானை இனி ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்பதில், இந்தியா தெளிவாக உள்ளது என, ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்திய எல்லைக்குள் ஊடுருவ காத்திருக்கும் பயங்கரவாதிகளை, பாகிஸ்தான் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் எனவும், ஒருவேளை இந்தியாவை தாக்க பாகிஸ்தான் அணு ஆயுதத்தை பயன்படுத்தினால், அதை உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்காது என தெரிவித்துள்ளார்.

Exit mobile version