முப்படைகளின் தளபதியாக பிபின் ராவத் நியமனம்

முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதி பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளுக்கும் ஒரே தலைமை தளபதி நியமிக்கப்படுவார் என்று தெரிவித்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க் கிழமை முப்படைகளுக்கும் சேர்ந்து ஒரே தலைமைத் தளபதி பதவிக்கு ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சகம், தலைமை தளபதியின் அதிகபட்ச வயது வரம்பு 65 ஆக அரசு நிர்ணயித்தது.

இந்நிலையில், தற்போது, ராணுவத் தளபதியாக இருக்கும் பிபின் ராவத், நாளையோடு பதவி ஓய்வு பெற உள்ள நிலையில் முப்படைகளின் தலைமை தளபதியாக, பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முப்படைகளின் தளபதிகளுக்கு ஆலோசகராக பிபின் ராவத் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version