சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து முன்னாள் ராணுவ அதிகாரியின் கருத்தை மதிக்கிறேன் – ராணுவ தளபதி பிபின் ராவத்

சர்ஜிக்கல் ஸ்டிரைக் அதிகமாக மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதிகாரி கருத்து கூறியிருந்தார். அந்தக் கருத்தை மதிப்பதாக ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரலும் சர்ஜ்ஜிக்கல் ஸ்டிரைக்கின் கண்காணிப்பு அதிகாரிகளில் ஒருவருமான ஹூடா, சர்ஜ்ஜிக்கல் ஸ்டிரைக்கை மிகைப்படுத்தி விட்டதாகவும், அது அதிகமாக அரசியலாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இருப்பினும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கைகள் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து ராணுவ தளபதி பிபின் ராவத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது அவரது தனிப்பட்ட கருத்து என்பதால் அது குறித்து கூற விரும்பவில்லை என அவர் தெரிவித்தார். அதேநேரம் அந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர் என்ற முறையில் அவரது கருத்தை மதிப்பதாகவும் கூறியுள்ளார்.

Exit mobile version