பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பூர்வக்குடி மக்களின் அடையாளம் அழிக்கப்படுகிறது – பிபின் ராவத்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பூர்வக்குடி மக்களின் அடையாளம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருவதாக ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாத தாக்குதல்களை தூண்டிவிடுவதன் மூலம் இந்தியா மீது கலப்பின போர் நிகழ்த்தப்படுவதாக கூறினார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பூர்வக்குடி மக்கள் தொகை மாறிவிட்டதாக கூறிய பிபின் ராவத், அதனை பாகிஸ்தான் திறமையாக செய்திருப்பதாக தெரிவித்தார். இதனால் யார் உண்மையான பூர்வக்குடி காஷ்மீர் மக்கள் என தெரியவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.

ஜம்மூ காஷ்மீர் இளைஞர்கள் இடையே செல்போன்கள் மூலம் தேசத்திற்கு எதிரான மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.

Exit mobile version