காஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் துப்பாக்கிச் சூடு

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதால் பதற்றம் நிலவி வருகிறது.

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை இன்று அதிகாலை தீவிரவாத முகாம்களை துல்லியமாக தகர்த்தது. இதில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 வீரர்களும், 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும் கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு எதிர் தாக்குதல் நடத்தும் விதமாக காஷ்மீர் எல்லைப் பகுதியான பூஞ்ச் மற்றும் கானசக் பகுதியில் பாகிஸ்தான் ராணும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Exit mobile version